நடுவானில் கடி வாங்கினார் விமான ஊழியர்

தோக்கியோ: பசிபிக் பெருங்கடலுக்கு மேலே விமானம் பறந்துகொண்டிருந்தபோது அதில் இருந்த பயணி ஒருவர் விமானச் சிப்பந்தியைக் கடித்தார்.

இதனால், விமானம் தரையிறங்க வேண்டிய சூழல் ஜப்பானில் ஏற்பட்டது.

ஜப்பானின் ‘ஆல் நிப்பான் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் விமானம் தோக்கியோவிலிருந்து அமெரிக்காவின் சியேட்டல் நகரத்திற்குப் போவதாக இருந்தது.

இருப்பினும், விமான ஊழியரின் கையைப் பயணி கடித்ததை அடுத்து விமானம் ஹனேதா விமான நிலையத்திற்குத் திரும்பியது.

விமானம் தரையிறங்கியதும் அமெரிக்கர் என்று நம்பப்படும் அந்த 55 வயது ஆடவர், காயம் விளைவித்ததன் சந்தேகத்தில் தோக்கியோ காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

சம்பவம் ஜனவரி 16ஆம் தேதியன்று நிகழ்ந்தது. இதற்கிடையே, ஆடவர் இவ்வாறு நடந்துகொண்டதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

விமானம் புறப்பட்டு சுமார் ஒன்றரை மணி நேரத்தில் திரும்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, தன் மீதான குற்றத்தை அந்த ஆடவர் மறுத்துள்ளதாக நம்பப்படுகிறது.

தூக்க மாத்திரை ஒன்றை உட்கொண்டதால் நடந்தது தனக்கு ஞாபகமில்லை என ஆடவர் காவல்துறையிடம் கூறியதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!