அம்மாவுக்குப் புற்றுநோய்; கலங்கிய பிரியா பவானி சங்கர்

புற்றுநோயை துணிச்சலுடன் எதிர்கொண்டதால் தன் தாய் அதிலிருந்து குணமடைந்ததாக நடிகை பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக ரோஜா தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், கடந்த ஆண்டு தன்னுடைய தாயாருக்குப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

தொடக்க நிலையிலேயே புற்றுநோயைக் கண்டறிந்ததால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கையூட்டியதாகக் குறிப்பிட்ட அவர், ‘விரைவில் குணமடைவீர்கள்’ என தன் தாயிடம் அடிக்கடி கூறியதாகத் தெரிவித்தார்.

“உரிய சிகிச்சை பெற்றதால் அம்மா குணமடைந்தார். எனவே, நோய் குறித்து பதற்றப்படாமல் அதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அப்போது, நிச்சயம் நல்லதே நடக்கும்,” என்று கண்கலங்கியபடி பேசினார் பிரியா பவானி சங்கர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!