முப்பது வினாடிகளுக்கு நான்கு கோடி சம்பளம்

இன்றைய தேதியில் தென்னிந்திய நடிகைகளின் பட்டியலில் ராஷ்மிகாவிற்குத்தான் முதல் இடம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், தமன்னா, காஜல் அகர்வால் போன்ற மற்ற கதாநாயகிகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணியில் நிற்கிறார் ராஷ்மிகா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்ட படங்கள் வசூல் ரீதியில் வெற்றி கண்டுள்ளன.

ராஷ்மிகாவின் இளமை துள்ளும் தோற்றமும் நடிப்பும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் மூன்று முறை தனது ஊதியத்தை ஏற்றி விட்டாராம் ராஷ்மிகா.

திரை உலகில் மட்டும் அல்லாமல் விளம்பரத் துறையிலும் இவரது கொடி உயரப் பறக்கிறது.

ஒரு குறிப்பிட்ட விளம்பர நிறுவனத்தின் தூதராகச் செயல்படவும் அந்நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிக்கவும் நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம் ராஷ்மிகா.

இந்தத் தகவலைக் கேட்டு விளம்பரப் பட இயக்குநர்களில் ஒரு தரப்பினர் அதிர்ச்சியில் உள்ளனர். மற்றொரு தரப்பினரோ இதைவிட அதிகம் கேட்டாலும் பரவாயில்லை என்கின்றனராம்.

தற்போது இந்தித் திரையுலகைப் பொறுத்தவரை தீபிகா படுகோன், ஆலியா பட், கத்ரினா கைஃப், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர்தான் விளம்பரங்களில் நடிப்பதில் முன்னணியில் உள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தென்னிந்தியாவில் ராஷ்மிகாவுக்கு பெரிய வரவேற்பு இருந்ததாகக் கூற இயலாது. அதன்பிறகு திரை உலகில் அவருக்கு கிடைத்த அடுத்தடுத்த வெற்றிகளும் பெரிய வாய்ப்புகளும் விளம்பர உலகத்தினரின் பார்வையை அவரது பக்கம் திருப்பியது எனலாம்.

இந்நிலையில் அண்மையில் வெளியீடு கண்ட ‘அனிமல்’ திரைப்படம் ராஷ்மிகாவை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. அதன் பலனாக விளம்பரங்களில் நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் பெற உள்ளார்.

பத்து முதல் முப்பது விநாடிகள் வரை ஓடக்கூடிய விளம்பரங்களில் நடிப்பதற்குத்தான் அவர் இவ்வளவு பெரிய தொகையைக் கேட்கிறார். பொதுவாக இத்தகைய விளம்பரங்களுக்கான படப்பிடிப்புகள் பெரும்பாலும் ஒரே வாரத்தில் முடிந்து விடும். முப்பது விநாடிகள் கொண்ட விளம்பரத்திற்காக மூன்று நிமிடங்கள் ஓடக்கூடிய காட்சிகளைப் படமாக்குவார்கள். பின்னர் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து மூன்று, நான்கு தனி விளம்பரங்களாக அவற்றை உருவாக்குவது, சம்பந்தப்பட்ட விளம்பர இயக்குநர், நிறுவனத்தின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது.

ராஷ்மிகாவைப் பொறுத்தவரை திரைப்படமோ, விளம்பரமோ அவர் வெளிப்படுத்தும் நடிப்பும் தனது பணியில் காட்டும் அக்கறையும் நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதற்கிடையே, கடை திறப்பு, தனியார் அமைப்புகளின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் தயக்கம் இன்றிக் கலந்து கொள்கிறார் ராஷ்மிகா. இதற்காக அவர் பெறும் தொகை அதிகம் இல்லை, 25 லட்சம் ரூபாய் தானாம்.

மற்ற நடிகைகள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க 15 லட்சம் ரூபாய்தான் வாங்குவதாகத் தகவல். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதிகபட்சம் மூன்று மணிநேரம்தான் இருப்பாராம் ராஷ்மிகா.

மலையளவு தொகை கேட்பதாக இவரை ஒரு தரப்பினர் விமர்சிக்கிறார்கள். ஆனால் ராஷ்மிகா பங்கேற்கும் நிகழ்ச்சி என்றால் பணம் செலவிட்டு எந்த விளம்பரமும் செய்யத் தேவை இல்லை என்றும் தன்னால் கூட்டம் கூடிவிடும் என்றும் இன்னொரு தரப்பினர் சுட்டிக் காட்டுகின்றனர்.

“ஏதோ கடை திறப்பிற்கு வந்தோம் விளம்பரங்களில் நடித்தோம் என்று ராஷ்மிகா நிறுத்திக்கொள்ள மாட்டார். அந்த நிறுவனம், கடையின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து தவறாமல் விசாரிப்பார்.

“அவரது இந்த அக்கறை உண்மையானது. தனக்கு வாய்ப்பு அளித்தவர்கள் முடங்கிப் போய்விடக் கூடாது என்ற உண்மையான அக்கறை அவரிடம் உள்ளது. எனவேதான் அவரை அதிகமானோர் நேசிக்கின்றனர் என்கிறார்கள் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!