பல மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராஷ்மிகா என்று பாராட்டியுள்ளார் மகேஷ் பாபு.
குறுகிய காலத்திலேயே தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை புகழ் பெற்று விட்டார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா தற்போது பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பட நிகழ்ச்சியில் ராஷ்மிகா பற்றி நடிகர் மகேஷ்பாபு பேசும்போது, “ராஷ்மிகா அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்று பாராட்டியதுடன் இனி அவர் நடிப்பதற்காக ஒரு புதிய மொழியைக் கண்டுபிடித்தே ஆகவேண்டும் எனக் கூறி பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.