வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
இப்படம் அண்மையில் நடைபெற்ற அனைத்துலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
அப்போது அரங்கில் இருந்தவர்கள் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருந்த இயக்குநர் கௌதம் மேனன், நடிகர் சேத்தன் ஆகிய இருவரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தில் சேத்தனின் நடிப்பு ரசிகர்களைக் கோபத்தின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் என்கிறார் படத்தின் நாயகன் சூரி.
“இரண்டாம் பாகத்தில் சேத்தன் மேலும் பல அடாவடிகளை அரங்கேற்றுவார். எனவே படம் வெளியாகும்போது அவரை வெளியே எங்கும் செல்லவிடாமல் வீட்டிலேயே அடைத்து வைப்பது நல்லது.
“இந்தக் கோரிக்கையை அவரது குடும்பத்தார் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று கூறியுள்ளார் சூரி.
அந்த அளவுக்கு சேத்தனின் நடிப்பு அருமையாக இருந்தது என ‘விடுதலை’ படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.