தீபாவளிக்குத் திருட்டு மின்சாரத்தில் ஒளிர்ந்த வீடு; முன்னாள் முதல்வருக்கு ரூ.68,000 அபராதம்

பெங்களூரு: தீபாவளித் திருநாளின்போது திருட்டு மின்சாரம் கொண்டு தமது இல்லத்தை ஒளிரச் செய்ததாக வெடித்த சர்ச்சைக்கு இந்தியாவின் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மின்தொழில்நுட்பரின் (எலக்ட்ரிசியன்) தவற்றால் அது நிகழ்ந்துவிட்டது என்று விளக்கமளித்த குமாரசாமி, இருந்தாலும் அதற்காக ரூ.68,526 (S$1,106) அபராதம் செலுத்திவிட்டதாகவும் தெரிவித்தார்.

கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவதால் அரசியல் ரீதியில் தமக்குச் சூனியம் வைப்பதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“முதல்வர், துணை முதல்வர் தலைமையில், ‘நானொரு மின்சாரத் திருடன்’ என அரசாங்கமே அவதூறு பரப்பி வருகிறது,” என்றார் குமாரசாமி.

ஆனால், மின்சாரத் திருட்டில் ஈடுபட்டதால்தான் குமாரசாமி அபராதம் செலுத்தியுள்ளார் என்று முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

“தவறேதும் செய்யவில்லை எனில் அவர் ஏன் அபராதம் செலுத்தினார்?” என்று கேட்டுள்ளார் முதல்வர்.

தீபாவளித் திருநாளையொட்டி பெங்களூரு ஜே.பி. நகரிலுள்ள தமது வீட்டை மின்விளக்குகளால் ஒளிரச் செய்வதற்காக குமாரசாமி மின்சாரம் திருடினார் என்று இம்மாதம் 14ஆம் தேதி கர்நாடக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது. அதற்குச் சான்றாக அருகிலிருந்த மின்பகிர்மானக் கம்பத்திலிருந்து ஒரு கம்பிவடம் சென்றதற்கான காணொளியையும் அது வெளியிட்டிருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!