மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம்

போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங், நான்காவது முறையாக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் முதல்வர் சவுகான் தனது அமைச்சரவையை விரிவுபடுத்தியுள்ளார்.

இந்த விரிவாக்கத்தில் ராஜேந்திர சுக்லா, கவுரிசங்கர் பிசேன், ராகுல் லோதி ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் சவுகான். கடந்த சனிக்கிழமை அவர்கள் மூவரும் ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற்றுக் கொண்டனர்.

புதிய அமைச்சர்களாகப் பதவியேற்றவர்களில், விந்த் வட்டாரத்தின் ரேவா தொகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர சுக்லா. இவர் ரேவா தொகுதியில் நான்கு முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர். இதற்கு முன் இவர் மத்திய பிரதேச மாநிலத்தின் வர்த்தக அமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

மகாகோஷல் வட்டாரத்தின் பாலகார் தொகுதியைச் சேர்ந்தவர் *கெரி சங்கர் பிசேன். இவர் ராஜ்புட் சமூகத் தலைவர்களில் ஒருவர். ராகுல் லோதி என்பவர் காரக்பூரைச் சேர்ந்தவர். இவர் ஓபிசி தலைவர் ஆவார். 2021 மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் இவர் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விரிவாக்கத்துக்கு முன்பு அமைச்சரவையில் முதல்வர் சவுகான் உட்பட 31 பேர் இடம்பெற்றிருந்தனர். அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி இம்மாநில அமைச்சரவையில் 35 பேர் வரை இடம்பெறலாம் என்று கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!