டெல்லியில் ஐஎஸ் பயங்கரவாதி கைது; காஷ்மீரில் நீடிக்கும் தேடுதல் வேட்டை

புதுடெல்லி: ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த மேலும் ஒரு பயங்கரவாதி டெல்லியில் கைதானார்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரைக் செய்துள்ளனர் என்றும் மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு வழக்கில் அவர் மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2022ஆம் ஆண்டு மங்களூரில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது தொடர்பாக பயங்கரவாதி முகமது ஷாரிக் கைதானார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கர்நாடகா மாநிலம், சிவமொக்கா பகுதியைச் சேர்ந்த அராபத் அலி என்பவர் பல்வேறு நாச வேலைகளுக்குத் திட்டம் வகுத்துக் கொடுத்தது தெரியவந்தது.

இந்நிலையில், கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் வந்திறங்கிய அராபத் அலியை புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.

இதற்கிடையே, பாராமுல்லா பகுதியில் மூன்றாவது நாளாக பாதுகாப்புப் படையினர் தீவிர வாதிகளை தேடும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களைக் கண்டறிவதில் ஆளில்லா சிறிய வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன.

சந்தேகத்துக்குரிய பகுதிகளில் பீரங்கிக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!