கடனை அடைக்காத காய்கறி வியாபாரிக்கு நேர்ந்த கதி

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரில் ரூ.3,100 கடனைச் செலுத்தாத காய்கறி வியாபாரியை அடித்து அவரை சந்தையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற சம்பவம் பரவலாக அதிர்ச்சியைக் கிளப்பிவிட்டு இருக்கிறது.

இந்தச் சம்பவத்தைக் காட்டும் காணொளி சமூக ஊடகத்தில் பரவி வருகிறது.

சம்பந்தப்பட்ட காய்கறி வியாபாரியின் பெயர் குறிப்பிடப்பவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிகாரிகள் அந்தச் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் மைன்பூரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த வியாபாரி, லக்னோவில் உள்ள காய்கறி சந்தை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

அவர் ஒரு முகவரிடம் ரூ.5,600 கடன் வாங்கி பூண்டு விற்பனை செய்யும் வண்டியுடன் பிழைப்பு நடத்தி வருகிறார்.

அவர் தான் வாங்கிய கடனில் ரூ.2,500 தொகையைச் செலுத்த சென்ற போது பணத்தைக் கடன் கொடுத்தவர் தன்னுடைய கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு தன்னை தாக்கியதாகவும் ஆடைகளைக் களைந்து சந்தையில் தன்னை நிர்வாணமாக இழுத்துச் சென்றதாகவும் அந்த வியாபாரி காவல்துறையிடம் புகார் தெரிவித்து இருக்கிறார்.

இது பற்றி கருத்து கூறிய அதிகாரிகள் சுந்தர் சிங், பகந்தாஸ் சிங் ஆகிய இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்டு இருப்பதாகவும் இதர சிலர் தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவித்தனர்.

அவர்களைத் தாங்கள் தேடி வருவதாக காவல்துறை தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!