புதுடெல்லி: மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. இவ்வாண்டு ஜூலை 1 முதல் அவ்வாறு இணைக்கப்படாத பான் எண் செயலிழக்கும் என அறிவிக்கப்பட்டது.
பான்-ஆதார் இணைப்புக்கான கெடு 2023, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 57.25 கோடி பேர்களின் பான் அட்டைகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் காலக்கெடுவை பல முறை நீட்டித்தும், பான் அட்டைகளை ஆதாருடன் இணைக்காத 11.50 கோடி பான் அட்டைகள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் ஐக்கிய நேரடி வரி விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த முடக்கப்பட்ட பான் அட்டைகளை நிரந்தரமாக பயன்படுத்த முடியாது.
நிரந்தரக் கணக்கு எண் எனப்படும் பான் எண்ணை வருமான வரித்துறை வழங்குகிறது. நாட்டில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்றவற்றைத் தவிர்க்க இந்த எண், ஆதாருடன் இணைக்கப்பட்டது.