புதுடெல்லி: ஒளிபரப்பாளர்கள் சுயமாகச் சான்றிதழ்களை வழங்கிக்கொள்ள வசதியாகப் புதிய சட்டத்தை இந்தியா வெள்ளிக்கிழமையன்று பரிந்துரை செய்துள்ளது.
இது தொலைக்காட்சிகளில் திரைப்படங்களை ஒளிபரப்பும் நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி, அமசோன் போன்ற நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
நெட்ஃபிளிக்ஸ், அமசோன் ஆகிய ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்தியாவில் பிரபலமடைந்துள்ளன.
2027ஆம் ஆண்டுக்குள் அவை ஒளிபரப்புத் துறையில் 7 பில்லியன் அமெரிக்க டாலர் (S$9.5 பில்லியன்) அளவை எட்டும் என்றது மீடியா பார்ட்னஸ் ஏஷியா.
பாலிவுட் நட்சத்திரங்களின் திரைப்படங்கள் இவற்றில் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன.
ஆபாசமான அல்லது சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் சில காட்சிகள் அமைவதாக இந்திய சட்டமன்ற உறுப்பினர்களும் பொதுமக்களும் குறைகூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஒவ்வொரு ஒளிபரப்பாளரும் சுய மதிப்பீட்டுக் குழுக்களை அமைப்பதன் மூலம், அவை எந்தெந்த காட்சிகள் திரையிடப்படலாம், திரையிடப்படக்கூடாது என்பதை ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று இந்திய தகவல், ஒளிபரப்பு அமைச்சர் அனுராஜ் தாகூர் தெரிவித்தார்.
“ஒவ்வொரு ஒளிபரப்பாளர் அல்லது ஒளிபரப்பு கட்டமைப்பு நடத்துநர் பல்வேறு சமூகப் பிரிவுகளைக் கொண்ட உள்ளடக்க மதிப்பீட்டுக் குழுவை அமைக்க வேண்டும்,” என்று பரிந்துரை ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.