ஓட்டல் உரிமையாளரை மிரட்டிய மாடல் அழகி கால்வாயில் சடலமாக மீட்பு

சண்டிகர்: கடந்த வாரம் குர்கான் ஓட்டலில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் மாடல் அழகி திவ்யா பஹுஜாவின் உடல் அரியானா கால்வாயில் இருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.

பஞ்சாபில் உள்ள பக்ரா கால்வாயில் வீசப்பட்ட சடலம் அண்டை மாநிலத்திற்குச் சென்றதாகவும் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவலர்கள் தெரிவித்தனர்.

“கொலைச் சம்பவம் ஜனவரி 1ஆம் தேதி நடந்துள்ளது. ஜனவரி 2ஆம் தேதி உடல் கால்வாயில் வீசப்பட்டுள்ளது. கொலையாளிகள் அழகியின் உடலை ஓட்டலில் இருந்து காரில் எடுத்துச் செல்வதை சிசிடிவி காட்சிகள் காட்டின,” என்று மூத்த குர்கான் காவல்துறை அதிகாரி முகேஷ் குமார் கூறினார்.

“அழகி குத்தியிருந்த பச்சை மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. குர்கான் ஓட்டல் உரிமையாளருடன் தனிமையில் இருந்த படங்களைக் காட்டி அவரை மிரட்டியதால் அழகி தலையில் சுடப்பட்டுள்ளார்,” என காவலர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கொலை தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் அபிஜித் சிங், ஹேம்ராஜ், ஓம் பிரகாஷ், மேகா போகத், பால்ராஜ் கில் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான ரவி பங்கா தலைமறைவாக இருக்கிறார். அவரை காவலர்கள் தேடிவருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!