பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு துறப்பு

சிங்கப்பூர் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் (TMAS) சார்பில் ஏற்பாடு செய்திருந்த இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்வு மார்ச் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று பென்கூலன் பள்ளிவாசலின் மூன்றாம் தளத்திலுள்ள பன்னோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு சங்கத்தின் இணைச் செயலாளர் ஜனாப் எஸ். செய்யது முபாரக் அவர்களின் புதல்வி எஸ். சபீராவின் கிரா அத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சங்கத்தின் தலைவர் ஜனாப் ஒய்.எஸ். செய்யது யூசுப் தலைமை உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து சங்கத்தின் முன்னாள் உஸ்தாத் மற்றும் பென்கூலன் பள்ளிவாசலின் இமாம் ஏ. சேக் அலி பாகவி மற்றும் மதரசா TMASன் உஸ்தாத் மௌலானா மௌலவி ஹாபீஸ் முகமது இஸ்மாயில் மன்பஈ அவர்களால் நோன்பின் மாண்பைப் போற்றும் மார்க்க சொற்பொழிவும் துவாவும் நடைபெற்றது.

இரவு 7.15 மணியளவில் துவாவுடன் அனைவரும் நோன்பு துறந்தனர். இ.எம். சாஹித் நிஜாமின் பாங்குக்குப் பின் அறுசுவை உணவுப் பதார்த்தங்கள் வழங்கப்பட்டன.

இறுதியாக இணைச் செயலாளர் ஜனாப் எஸ். செய்யது முபாரக் நன்றியுரை ஆற்றினார். சங்கத்தின் செயலாளர் ஜனாப் இ.எம். சாகுல் ஹமீது இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

மார்ச் 28ஆம் தேதி பென்கூலன் பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்பு துறப்பு நிகழ்ச்சி. படம்: பென்கூலன் பள்ளிவாசல்
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!