$173,000 போதைப்பொருள்களுடன் பிடிபட்ட ஆடவர்மீது குற்றச்சாட்டு

கைதின்போது காவல்துறை அதிகாரி காயமடைந்தார் 

போதைப்பொருள் குற்றங்கள் புரிந்ததாகச் சந்தேகிக்கப்பட்ட 28 வயது ஆடவர் பீ‌ஷானில் புதன்கிழமை (ஜூலை 5) கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் கிட்டத்தட்ட $173,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

கைது நடவடிக்கையின்போது காவல்துறை அதிகாரி ஒருவர் லேசாகக் காயமடைந்ததாகக் காவல்துறையும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி அறிக்கை தெரிவித்தது.

பீ‌ஷானின் ‌ஜாலான் பின்ச்சாங்கில் உள்ள ஒரு வீட்டில் உதவி தேவைப்படுவதாக அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மாலை 6.40 மணியளவில் காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்றனர்.

“அந்த ஆடவர் கைது செய்யப்படுவதைத் தடுக்க கடுமையாகப் போராடினார். அவரை அடக்குவதற்குத் தேவையான பலம் பயன்படுத்தப்பட்டது,” என அறிக்கை குறிப்பிட்டது.

காவல்துறை அதிகாரிகள் வீட்டைச் சோதனையிட்டபோது ஏறக்குறைய 450 கிராம் ஐஸ், 2,229 கிராம் கஞ்சா, 258 கிராம் எக்ஸ்டசி மாத்திரைகள், 81 எரிமின்-5 மாத்திரைகள், 89 எல்எஸ்டி வில்லைகள் உட்பட இதர போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட $173,000.

கைப்பற்றப்பட்ட ஐஸ், கஞ்சா இரண்டும் ஒரு வாரத்திற்குக் கிட்டத்தட்ட 580 போதைப்புழங்கிகளின் பயன்பாட்டிற்குப் போதுமானவை.

கைதான ஆடவர்மீது வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!