ரயில் கதவுகளைப் பலவந்தமாகத் திறக்க முயன்றவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

எம்ஆர்டி ரயிலின் உள்ளிருந்து வலுக்கட்டாயமாக அதன் கதவுகளை பயணி ஒருவர் திறப்பதைக் காட்டும் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பயணி மீது வெள்ளிக்கிழமை மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது.

வனேசா வாங் ஸி குயி, 47, எனப்படும் அவர், பொதுமக்களுக்குத் தொல்லை கொடுத்ததாக மூன்று குற்றச்சாட்டுகளையும் தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டையும் தற்போது எதிர்நோக்குகிறார்.

டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணியளவில் இயோ சூ காங் எம்ஆர்டி நிலையத்தில் ரயில் ஒன்றின் கதவுகளை வாங் இழுத்துத் திறக்க முயன்ற செயல் பயணிகளுக்கு தொல்லை தரும் வகையில் இருந்ததாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிட்டன.

சம்பவத்தின்போது ரயில் நகர்ந்துகொண்டு இருந்ததா என்பது பற்றி ஆவணங்கள் தெரிவிக்கவில்லை.

வாங் மீது ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு இருந்தன. நவம்பர் 27ஆம் தேதி பிராடல் எம்ஆர்டி நிலையத்திலும் நவம்பர் 29ஆம் தேதி அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்திலும் ரயில் கதவுகளை அவர் பலவந்தமாகத் திறக்க முயன்ற குற்றம் தொடர்பானவை அவை.

மேலும், நவம்பர் 29ஆம் தேதி அங் மோ கியோ எம்ஆர்டி நிலையத்தில் ஆடவர் ஒருவரின் காலில் உதைத்த குற்றத்தையும் அவர் செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!