ஜீடாஸ் நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கு

சிங்கப்பூர் ரத்தின வணிகர்கள் சங்கம் கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மாலை, ஜாலான் புசார் சமூக மன்ற அறையில் கணக்குகளைப் பராமரிப்பது மற்றும் பண விவகாரங்களைக் கையாள்வதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தது.

ஜாஸ் பயிற்சி நிறுவன முதன்மை பயிற்றுவிப்பாளர் திரு அப்துல் ஜப்பார், சிறப்பு உரையாளராகக் கலந்துகொண்டு தலைப்பை ஒட்டிய பல்வேறு விளக்கங்களை எடுத்துக்காட்டுகள், காணொளிகள் மூலம் விளக்கினார்.

ஒரு தொழிலின் வளர்ச்சியிலும், அதன் போக்கை அறிந்துகொள்ளவும் வரவு-செலவு கணக்கு பதிவு செய்வதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு திரு ஜப்பார் விளக்கினார்.

முன்னதாக ஜீடாஸ் எனப்படும் சிங்கப்பூர் ரத்தினக்கல் வணிகர்கள் சங்கத் தலைவர் திரு முஹம்மது பிலால் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நன்யாங் ஜெம்மாலஜிகல் இன்ஸ்டிடியூட் மேலாண்மை இயக்குநரும், மூத்த ரத்தினவியலாளருமான திரு ஷெங் சுங்குவாங், சிறப்புரையாளருக்கு நினைவுப் பரிசையும், சங்கத்தின் செயலாளர் திரு ரஃபி அகமது அன்பளிப்பையும் வழங்கினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!