குறுஞ்செய்திவழி மோசடி: 7 பேர் கைது

குறுஞ்செய்திவழி இடம்பெற்ற வங்கிசார்ந்த மோசடி வழக்குகளில் 18 முதல் 27 வயதுடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் தீவு முழுவதும் மேற்கொண்ட மோசடித் தடுப்பு அமலாக்க நடவடிக்கைகளை அடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் பணத்திற்காகத் தங்கள் வங்கிக் கணக்குகளையும் இணைய வங்கி விவரங்களையும் சிங்பாஸ் மறைச்சொற்களையும் பகிர்ந்துகொண்டது தெரியவந்தது. 

வங்கியின் கணினிக் கட்டமைப்புக்குள் அனுமதியின்றி நுழைவதற்கு அடையாளம் தெரியாத ஆள்களுக்கு உதவி செய்தது தொடர்பாக அந்த எழுவரில் அறுவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். 

அவர்கள் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்டவர்கள்.

சிங்பாஸ் விவரங்களைப் பகிர்ந்துகொண்ட குற்றத்திற்காக 18 வயது இளையர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

தங்களது வங்கிக் கணக்கு அல்லது தொலைபேசி விவரங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.

ஏனெனில், குற்றங்களுடன் இவை தொடர்புபடுத்தப்பட்டால் அக்குற்றங்களுக்கு அவர்களும் பொறுப்பேற்கும்படி நேரலாம்.

மேலும், ஸ்கேம்ஷில்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து, பாதுகாப்பு அம்சங்களை நிறுவுமாறும் பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!