வலைப்பயிற்சிக்கு இந்தியப் பந்துவீச்சாளர்களைத் தேடும் வெளிநாட்டு கிரிக்கெட் அணி

ஆம்ஸ்டர்டாம்: இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட நெதர்லாந்து கிரிக்கெட் அணி தகுதிபெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தியச் சூழலுக்கேற்றவாறு தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள நெதர்லாந்து அணி முனைப்பு காட்டி வருகிறது.

அதன்படி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள அலூரில் இம்மாதம் 20-24ஆம் தேதி வரை உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முந்திய ஐந்து நாள் பயிற்சி முகாமில் அவ்வணி பங்கேற்கவுள்ளது.

இந்நிலையில், அந்தப் பயிற்சி முகாமின்போது தங்களுக்கு உதவ உள்ளூர்ப் பந்துவீச்சாளர்கள் தேவை என்று நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் சமூக ஊடகம் வழியாக விளம்பரம் செய்துள்ளது.

வலக்கை, இடக்கை வேகப் பந்துவீச்சாளர், சுழற்பந்து வீச்சாளர்கள் தேவை என்று அவ்விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கான பயணம், தங்குமிடம், உணவு போன்ற செலவுகளை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியமே ஏற்றுக்கொள்ளும்.

கட்டாயமில்லை என்றபோதிலும், வெளிநாட்டிலிருந்து வரும் அணிகளுக்கு இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் வாரியங்களே வலைப் பந்துவீச்சாளர்களை வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

அவ்வகையில், அலூரு நகரிலுள்ள சிறந்த பந்துவீச்சாளர்களை நெதர்லாந்து அணியின் வலைப்பயிற்சிக்கு அனுப்ப தயாராக இருப்பதாகக் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!