ஆசிய கபடி போட்டி: இந்தியா கிண்ணம் ஏந்தியது

பூசான்: தென் கொரியாவின் பூசான் நகரில் ஆசிய கபடி போட்டி 2023 தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.

வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை அரங்கேறியது. இறுதிப்போட்டியில் நடப்பு வெற்றியாளர் ஈரான் மற்றும் முன்னாள் வெற்றியாளரான இந்திய அணிகள் மோதின.

பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் இந்திய அணி 42-32 என்ற புள்ளிக்கணக்கில் ஈரானை வீழ்த்தி தங்கம் வென்றது.

முற்பாதியில் இந்திய அணி 23-11 என்று முன்னிலை பெற்றது. பிற்பாதியிலும் முன்னிலையை தக்கவைத்துக்கொண்டது. இந்திய அணியின் தலைவர் பவன் ஷெராவத் அதிரடியாக விளையாடி புள்ளிகளைச் சேகரித்தார். அவரே இந்த ஆட்டத்தின் நாயகன்.

இந்தத் தொடரில் இந்திய அணி ஆடிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் இந்திய அணி ஆசிய கபடி போட்டி கிண்ணத்தை எட்டாவது முறையாக வென்று வரலாறு படைத்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!