நாலாமிடத்திற்குச் சரியானவர் கோஹ்லிதான்: டி வில்லியர்ஸ்

புதுடெல்லி: வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

உலகக் கிண்ணப் போட்டிகள் நெருங்கும் நிலையில், இந்திய அணியில் நான்காவது வீரராக யாரைக் களமிறக்கலாம் என்பதில் பலகாலமாகவே குழப்பம் நீடித்து வருகிறது. அதுகுறித்த விவாதம் முடிந்தபாடில்லை.

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராத் கோஹ்லிதான் அவ்விடத்திற்கு மிகப் பொருத்தமானவர் என்று அடித்துச் சொல்கிறார் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் தலைவர் ஏபி டி வில்லியர்ஸ்.

“இந்திய அணியின் நாலாவது பந்தடிப்பாளர் குறித்து இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம். அவ்விடத்திற்கு விராத் கோஹ்லியின் பெயர் அடிபடுகிறது. அதனை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

“நாலாமிடத்திற்கு கோஹ்லிதான் மிகச் சரியான ஆள். களமிறங்கும் நிலைக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு, சூழ்நிலைக்கேற்ப விளையாடி, அவரால் அணிக்கு வலுச்சேர்க்க முடியும்.

“ஆனால், நாலாம் நிலையில் களமிறங்க கோஹ்லி விரும்புவாரா எனத் தெரியவில்லை. ஏனெனில், மூன்றாம் நிலையில்தான் அவர் அதிக ஓட்டம் குவித்துள்ளார். ஆயினும், அணிக்குத் தேவையெனில், நாலாம் நிலையில் களமிறங்கத் தயாராக அவர் முன்வர வேண்டும்,” என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!