ஆசியக் கிண்ணம்: பங்ளாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான்

லாகூர்: ஆசியக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டங்கள் முடிந்து சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ளன. புதன்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான், பங்ளாதேஷ் அணிகள் மோதின.

முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியின் தலைவர் ஷகீப் உல் ஹசனும் முஷ்புகீர் ரஹ்மானும் மட்டும் சிறப்பாக விளையாடி அரை சதம் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேற 193 ஓட்டங்களில் பங்ளாதேஷ் சுருண்டது. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40வது ஓவரில் 194 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி இலக்கை எட்டியது. பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், அதிகபட்சமாக 78 ஓட்டங்களைச் சேர்த்தார். ஹாரிஸ் ரவுஃப் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!