முன்னணி வீரருக்குக் காயம்; இலங்கைக்குச் சிக்கல்

கொழும்பு: ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி சிங்கப்பூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் இந்தியாவும் போட்டியை ஏற்று நடத்தும் இலங்கையும் மோதுகின்றன.

சொந்த மண்ணில், சொந்த ரசிகர்களுக்கு முன் விளையாடும் சாதகநிலை இலங்கை அணிக்கு உள்ளது.

இருப்பினும், அவ்வணியின் முக்கிய வீரர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தீக்‌ஷனா களக்காப்புப் பணியில் ஈடுபட்டபோது அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இதன் முடிவு வெளிவந்த பின்னரே அவர் இறுதிப்போட்டியில் பங்கேற்பாரா என்பது தெரியவரும் என்று இலங்கை கிரிக்கெட் மன்றம் அறிவித்துள்ளது.

இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக தீக்‌ஷனா களமிறங்காவிடில் அது இலங்கைக்குப் பின்னடைவாக அமையும் என்று கூறப்படுகிறது.

தீக்‌ஷனா விளையாடுவார் என்ற நற்செய்தி தங்கள் செவிகளை எட்ட வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இலங்கை ரசிகர்கள் பதற்றம் கலந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!