தமிழகத்திற்கான உரிமையை அளிக்க வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்து

வேலூர்: காவிரியில் தமிழகத்திற்கான உரிமையை அளிக்க வேண்டும் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையம் தனது பணியை செய்யத் தவறியதால்தான் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

“காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகா ஏன் தீர்ப்பாயத்துக்குச் செல்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரைக் கேட்கிறோம்.

“கிட்டத்தட்ட 50 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளது. போதுமான தண்ணீர் இல்லாமல் தவிக்க நேரிடுவதாக கர்நாடக அரசு ஒரு காரணத்தைச் சொல்கிறது. அப்படியெனில், தண்ணீரை எவ்வாறு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை காவிரி மேலாண்மைக் குழு முன்பே முடிவு செய்திருக்க வேண்டும்,” என்றார் அமைச்சர் துரைமுருகன்.

ஆனால், அக்குழு அப்பணியைச் செய்யவில்லை என்று சாடிய அவர், கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நீதிமன்ற வழக்குகளில் ஒருமுறைகூட மேகதாது என்ற வார்த்தையை கர்நாடகா பயன்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்றத்திலும் கர்நாடக அரசு மேகதாது என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை என்றும் இன்று மேகதாது குறித்து தொடர்ந்து பேசி வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!