உடல் உறுப்பு நன்கொடையாளர்கள் எண்ணிக்கை 27 மடங்கு அதிகரிப்பு

சென்னை: கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் தமிழகத்தில் உடல் உறுப்பு நன்கொடையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐந்து வாரங்களில் மட்டும் 2,700க்கும் அதிகமானோர் உறுப்பு தானத்திற்கு பதிவு செய்துள்ளனர்.

மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து கண்கள், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம் உள்ளிட்ட உறுப்புகளைத் தானமாகப் பெற முடியும். இதன் மூலம் பன்னிரண்டு பேருக்கு மறுவாழ்வு அளிக்க முடியும்.

இந்நிலையில், இறக்கும் முன்பு உறுப்பு நன்கொடைக்கு பதிவு செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து வாரங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்தே உடல் உறுப்பு நன்கொடைக்கான விருப்பப் பதிவுகள் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக மாதந்தோறும் உடல் உறுப்பு தானம் தொடர்பாக நூறு விருப்பங்கள் மட்டுமே பதிவாகும். ஆனால், கடந்த ஐந்து வாரங்களில் மட்டும் 2,700 விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன என்று கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!