சிங்க‌ப்பூர்

இணையத்தில் தேடாமலே மனதுக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் வருவதாக 10ல் ஆறு இளையர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈசூனில் பயன்படுத்தப்படாத மீன் குளம் ஒன்றில் நீர் வற்றிய சம்பவம் குறித்து வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் விசாரித்துவருகிறது. நீர் வற்றியதால் மீன்கள் இறந்தன.
சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் இடைமாற்றுப் பகுதிக்குள் செல்ல, தவறான முறையில் தமது நுழைவு அட்டையைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 25 வயது மாது ஜனவரி 22ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
சிறு வயதில் சிங்க நடனத்தின்மீது எழுந்த ஆர்வம் இன்று 11 ஆண்டுகள் கழித்தும் 23 வயதாகும் பிரின்ஸ் ஷானுக்கு சற்றும் குறையவில்லை.
மின்னிலக்க சிவப்பு பரிசு அட்டையைக் கொடுத்து, விழாக்கால மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள், அந்தப் பரிசு அட்டையை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்று நினைவூட்டப்படுகிறார்கள்.