இந்தியா

புதுடெல்லி: ஃபோர்ப்ஸ் ஆசியா இதழின் நன்கொடையாளர்கள் பட்டியலில், நந்தன் நிலகனி, கே.பி.சிங், நிகில் காமத் என மூன்று இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் கொச்சி ஒயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா (6 வயது) கடந்த 27ஆம் தேதி மாலை, தனது சகோதரருடன துணைப்பாட வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று அந்தச் சிறுமியை குண்டுக்கட்டாகத் தூக்கி, காரில் போட்டுக் கொண்டு பறந்தனர்.
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் ரயில்வே துறையை அழித்து வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ருல்: மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த வியாழக்கிழமை மாலை 5.40 மணியளவில் முகமூடிக் கொள்ளையர்கள் புகுந்து அங்கிருந்து 18.85 கோடி ரூபாயைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.