இந்தியா

திருவனந்தபுரம்: கேரள ஆளுநர் தனது அரசியல்சாசனக் கடமையை சரிவரச் செய்யவில்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு தொடுத்துள்ளது.
குர்கான்: வீட்டிலிருந்து வேலைசெய்து பணம் ஈட்டலாம் என்று கூறி மோசடி செய்து, ரூ.21 கோடி (S$3.44 மில்லியன்) சுருட்டிய 27 வயது ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.
அகமதாபாத்: கடந்த 2022 அக்டோபர் முதல் இவ்வாண்டு செப்டம்பர்வரை அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாகக் கூறி, 96,917 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்கச் சுங்க, எல்லைப் பாதுகாப்புத் துறைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் குடும்பத்திற்குச் சொந்தமான ரூ.538 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி டெல்லி மகாத்மா காந்தியின் நினைவிடத்தின் அருகே பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.