60க்கும் மேற்பட்ட உணவுப்பொருள்களை மீட்டுக்கொண்ட குவேக்கர் ஓட்ஸ்

பிரபல ‘குவேக்கர் ஓட்ஸ் கம்பெனி’ அதன் உணவுப் பொருள்களை மீட்டு வரும் பட்சத்தில் மேலும் அதிகமானவற்றை அந்தப் பட்டியலில் கடந்த சில நாள்கள் சேர்த்துக்கொண்டுள்ளது.

‘சால்மனெல்லா’ மாசுபாடு ஏற்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் நிறுவனம் இதுவரை 60க்கும் மேற்பட்ட உணவுப்பொருள்களை மீட்டுக்கொண்டது.

‘பெப்சிகோ’வின் கீழ் இயங்கிவரும் ‘குவேக்கர் ஓட்ஸ்’ தொடக்கத்தில் 43 உணவுப்பொருள்களை மீட்டுக்கொண்டது. பின்னர், ஜனவரி 11ஆம் தேதியன்று மேலும் 24 உணவுப்பொருள்களைப் பட்டியலில் சேர்த்துக்கொண்டது.

இதுவரை, மீட்டுக்கொண்ட உணவுப்பொருள்களால் நோய்வாய்ப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் புகார்கள் ஏதும் குவேக்கருக்குக் கிடைக்கவில்லை என்று அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகம் முன்னதாகக் கூறியது.

அதையடுத்து சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்துத் தகவல் இல்லை.

இளம் பிள்ளைகள், எளிதில் உடல் பாதிக்கப்படும் நிலையில் உள்ள பெரியவர்கள், உடலில் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள் போன்றோரை ‘சால்மனெல்லா’ எனும் ஒருவகை பாக்டீரியா பாதித்தால், அது உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!