ஆஸ்திரேலியாவில் ஓயாத வெப்ப அலை; அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதிகள் டிசம்பர் 9ஆம் தேதியன்று வெப்ப அலைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்த வெப்ப அலையால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உண்டு என்பதால் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல இடங்களில் நெருப்பு மூட்டுவதற்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

சிட்னியில் டிசம்பர் மாதம் சராசரியாகப் பதிவாகும் வெப்ப நிலையைக் காட்டிலும் 15 டிகிரி செல்சியஸ் அதிகம், அதாவது அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரலாம் என்று ஆஸ்‌திரேலிய வானிலை முன்னுரைப்புகள் கூறுகின்றன.

“நாம் ஒருவரை ஒருவர் கவனித்துக்கொள்வதுடன் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் நேரம் இது,” என்று பிரதமர் அந்தோணி அல்பெனிஸ் குறிப்பிட்டார்.

ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான கோடைக்காலத்தில் ஏற்கெனவே காட்டுத்தீ ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்க, இந்த வெப்ப அலையால் அந்த அபாயம் உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், நியூ சவுத் வேல்சில் 71 காட்டுத்தீச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றில் 21ஐ இன்னமும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை என்றும் மாநிலத்தின் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.

அடுத்த வாரம் வரை இந்தக் கடுமையான வெப்ப அலை நிலவரம் நீடிக்கலாம் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஒரு சிலர் இந்த வெப்ப அலையைத் தங்களுக்குச் சாதகமாகக் கருதிக் கடற்கரைக்குப் படையெடுத்துச் செல்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!