அடுத்த வாரத் தொடக்கத்தில் இங்கிலாந்தில் பனிமழை பெய்யும் என தகவல்

லண்டன்: ஐரோப்பா முழுவதும், வெப்பநிலை இவ்வார இறுதியில் உறைநிலைக்குக் கீழ் இருக்கும்.

அதனால், அடுத்த வாரத் தொடக்கத்தில் லண்டனிலும் பிரிட்டனின் பிற பகுதிகளிலும் பனி கொட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டனில் வெப்பநிலை, மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை என்றும் குறையும் என்றும் பாரிசில் உறைநிலைக்குக் கீழ் 2.5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஐரோப்பாவில் அடுத்த வாரத்தின் பெரும்பாலான நாள்களில் இத்தகைய குளிர் நீடிக்கும்.

நார்டிக் தலைநகரங்களான ஹெல்சின்கியிலும் ஒஸ்லோவிலும் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழ் 18.5 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று கூறப்படுகிறது. இந்தக் குளிரை எதிர்கொள்ள ஐரோப்பா தயார்நிலையில் உள்ளது. அதிக எரிவாயுச் சேமிப்பு, குறைவான தொழில்துறைச் செயல்பாடுகள் போன்ற நடவடிக்கைகளால் அது சாத்தியமானது.

அடுத்த வாரத்திலிருந்து மத்திய தரைக்கடல் பகுதியில் வழக்கத்தைவிட அதிகமான வெப்பநிலை நிலவும். இதனால், மட்ரிட்டிலும் ரோமிலும் வெப்பநிலை 14 - 15 டிகிரி செல்சியசுக்கு இடைப்பட்டிருக்கும் என்று புளூம்பெர்க் கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!