4ஆம் கட்ட உக்ரேன் அமைதி பேச்சுவார்த்தை டாவோஸ் நகரில் நடக்கிறது

கீவ்: உக்ரேன் அமைதித் திட்டத்திற்கு உதவும் ஆக அண்மைய நடவடிக்கைகளில் ஒன்றாக, வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரேனும் சுவிட்சர்லாந்தும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தை நடத்த உள்ளன.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஏறத்தாழ 120 தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் பங்கேற்பார்கள் என்று சுவிட்சர்லாந்தின் வெளியுறவுத் துறை தெரிவித்து உள்ளது.

சுவிஸ் உல்லாச பொழுதுபோக்கு நகரான டாவோஸில் அந்தக் கூட்டம் நடக்க உள்ளது. உலகப் பொருளியல் கருத்தரங்கும் மறுநாள் அதே நகரில் நடக்கிறது.

உக்ரேனில் அமைதியை நிலைநாட்டுவதற்கான நான்காவது முயற்சி இது. இதற்கு முன்னர் கோபன்ஹேகனிலும் ஜெட்டாவிலும் அமைதி முயற்சி கூட்டங்கள் நடைபெற்ற பின்னர் ஆக அண்மையில், அக்டோபர் மாதம் மால்டாவில் அதேபோன்ற கூட்டம் நடைபெற்றது.

மால்டா ஆலோசனைக் கூட்டம் உலக அமைதி உச்சநிலைக் வட்டத்திற்கான தேதியை நிர்ணயிக்க வகை செய்யும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். உக்ரேன் வகுத்துள்ள 10 அம்ச அமைதித் திட்டத்திற்கு ஒட்டுமொத்த ஆதரவை திரட்ட அந்த உச்சநிலைக் கூட்டம் அவசியம்.

உக்ரேன் அதிபர் வெலாடிமிர்ஸெலென்ஸ்கி 2022 டிசம்பரில் ஏற்படுத்திய வரைவுத் திட்டம் அது.

திட்டத்தின் அம்சங்களை அமல்படுத்துவது தொடர்பான முடிவை எடுக்க இருக்கும் அந்த உச்சநிலைக் கூட்டம் 2024 பிப்ரவரியில் நிகழக்கூடும் என்று கீவ் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!