நீருக்கடியில் வடகொரியா அணுவாயுதச் சோதனை

சோல்: வடகொரியா, நீருக்கடியில் செயல்படக்கூடிய அணுவாயுதங்களைச் சோதித்ததாகத் தெரிவித்துள்ளது.

இந்த வாரம் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகியவை நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்தது.

நீருக்கடியில் செயல்படும் அணுவாற்றல் கொண்ட ஆளில்லா வானூர்திக்கு ‘ஹெயில்-5-23’ என்று வடகொரியா பெயரிட்டுள்ளது.

நாட்டின் கிழக்குக் கரையோரக் கடல் பகுதியில் வடகொரியத் தற்காப்பு அமைச்சு அதைச் சோதித்தாகக் கூறப்படுகிறது.

அந்தச் சோதனை எப்போது நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மூன்றும் நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சியைக் குறைகூறிய வடகொரியத் தற்காப்பு அமைச்சின் பேச்சாளர், அந்நாடுகள் பேரழிவை ஏற்படுத்தும் பின்விளைவைச் சந்திக்க நேரும் என்று எச்சரித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!