கீவ்: உக்ரேனின் கார்கிவ் நகரைக் குறிவைத்து ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் ஏழு பேர் மாண்டனர்.
அவர்களில் மூவர் சிறுவர்கள்.
இந்தத் தாக்குதல் உக்ரேன் நேரப்படி பிப்ரவரி 9ஆம் தேதி இரவு நிகழ்ந்ததாக கார்கிவ் ஆளுநர் ஒலே ஸ்னேஹுபோவ் தெரிவித்தார்.
தாக்குதல் காரணமாக ஏழு மற்றும் நான்கு வயது சிறுவர்களுடன் ஆறு மாதக் குழந்தை ஒன்றும் மாண்டதாக அவர் கூறினார்.