தோக்கியோ: ஜப்பான், இவ்வாண்டு ஜூன் மாதம் முதல் கடலடி வானூர்திகளைச் (ஏயுவி) சோதித்துப் பார்க்கவிருப்பதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளில்லாமல் இயங்கக்கூடிய வானூர்திகளான ஏயுவிக்கள் தேசியப் பாதுகாப்பு போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தனியார் நிறுவனங்கள் அவற்றைப் பயன்படுத்தும் முயற்சிகளை இன்னும் எடுக்கவில்லை.
அவற்றை உற்பத்தி செய்வதற்கான செலவு அதிகமாக இருப்பது, அவற்றைப் பயன்படுத்துவதில் போதுமான அனுபவம் இல்லாதது ஆகியவை அதற்கான காரணங்கள்.
நீர் அழுத்தம் அதிகமான இருக்கும் அபாயகரமான நீர்ப்பகுதிகளிலும் ஆழம் அதிகமாக இருக்கும் கடற்பகுதிகளிலும் ஏயுவிக்கள் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓர் ஏயுவியின் விலை பல்லாயிர மில்லியன் யென்னுக்கும் ஒரு பில்லியன் யென்னுக்கும் (8.8 மில்லியன் வெள்ளி) இடைப்பட்டிருக்கும்.
ஏயுவிக்களை 2030ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த ஜப்பானிய அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளது.
ஏயுவிக்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான திட்டத்தை ஜப்பான் சென்ற ஆண்டு வரைந்தது. தற்போது அமெரிக்காவும் சீனாவும்தான் உலகளவில் ஏயுவிக்களை அதிகம் உற்பத்தி செய்கின்றன.