விலகி நிற்க முடிவு செய்துள்ளேன்: லோகேஷ்

சமூக வலைத்தளங்களில் இருந்து சில காலம் விலகி நிற்க முடிவு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்தக் கால அவகாசத்தை பயன்படுத்தி தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறியுள்ளார்.

“சில காலம் எனது கைப் பேசியில் இருந்து விலகி நிற்க முடிவு செய்துள்ளேன். இச்சமயம் யாரும் என்னைத் தொடர்பு கொள்ள முடியாது. நேர்மறையான எண்ணங்களில் கவனம் செலுத்தி எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகுங்கள்,” என்கிறார் லோகேஷ்.

‘லியோ’ திரைப்படம் இடைவேளைக்குப் பிறகு தொய்வு ஏற்பட்டதாக வெளியான விமர்சனங்களைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பான அழுத்தமே இதற்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இனிமேல் வெளியீட்டுத் தேதியை அறிவிக்காமல் பட வேலைகளைக் கவனிக்க வேண்டும் என முடிவு செய்து இருப்பதாகவும் ‘லியோ’ படத்தின் விமர்சனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

“ஒரு பெரிய படத்தை உருவாக்கும்போது அனைத்து வேலைகளையும் பத்து மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்பது பெரிய சவால். அந்தப் பத்து மாதங்களில் என்னவெல்லாம் நடந்தன என்பதே தெரியாது.

“திரும்பிப் பார்த்தால் கடந்த நான்கு ஆண்டுகளும் இப்படித்தான் கடந்து போயிருக்கின்றன. எனவே இவ்வளவு வேகம் தேவை இல்லை எனக் கருதுகிறேன்,” என்று லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!