அண்மைய

செல்லப்பிராணிகளுக்காக வீட்டிலிருந்து இயங்கிய சிகை திருத்தும் வர்த்தகம் ஒன்று, அதன் சேவையை நாடியவரது நாயைத் தொலைத்துவிட்டது. அந்த நாய் பின்னர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது.
தன்னைத் தெய்வம் என்று கூறிக்கொண்டு தன்னுடைய ஆதரவாளர்களிடமிருந்து $7 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வசூலித்ததாக 53 வயது வூ மே ஹோ மீது குற்றம் சாட்டப்பட்டது.
மதுரை: காங்கிரஸ் கட்சியின் நெல்லைப் பகுதி நிர்வாகி ஜெயகுமார் தனசிங் அண்மையில் மாயமானார். பின்னர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உடல் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதற்காக அவரது எலும்புகள், மதுரை மண்டல தடைய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மரபணு அறிக்கை கிடைத்த பிறகு ஜெயகுமாரின் மகன், மனைவியின் மரபணுக்களும் ஒப்பீடு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: நாட்டில் நடைபெறும் தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை: திமுகவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.