கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் மாதம் 24, 31ஆம் தேதிகளில் சில பொதுப் பேருந்து, பெருவிரைவு ரயில் சேவைகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூடுதல் நேரத்துக்கு இயக்கவுள்ளது.
அந்த இரு நாள்களிலும் சில பேருந்து, ரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகும் செயல்படும். வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய பெருவிரைவு ரயில் பாதைகளில் சேவை நேரம் அவ்வாறு நீட்டிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட பாதைகளில் இரு நாள்களிலும் கடைசி ரயில் பின்னிரவு 1.17 மணிக்கும் 2.10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும். புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை, சாங்கி விமான நிலையத்திற்கான ரயில் சேவைகள் ஆகியவை நீட்டிக்கப்படமாட்டா.
சுவா சூ காங் பேருந்து முனையத்திலிருந்து கிளம்பும் பேருந்துச் சேவைகள் 300, 301, 302, 307, 983A, உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மையத்திலிருந்து புறப்படும் பேருந்துச் சேவைகள் 901, 911, 912A, 912B, 913, புக்கிட் பாஞ்சாங் பேருந்து முனையத்திலிருந்து கிளம்பும் பேருந்துச் சேவைகள் 920, 922, 973A ஆகியவற்றின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேல்விவரங்களுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-336-8900 எனும் அதன் பயனர் தொடர்பு எண்ணை தினமும் காலை ஏழரை மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை அழைக்கலாம்.