கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு முதல் நாள்களில் பேருந்து, ரயில் சேவை நேரம் நீட்டிப்பு:எஸ்எம்ஆர்டி

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஆகியவற்றை முன்னிட்டு டிசம்பர் மாதம் 24, 31ஆம் தேதிகளில் சில பொதுப் பேருந்து, பெருவிரைவு ரயில் சேவைகளை எஸ்எம்ஆர்டி நிறுவனம் கூடுதல் நேரத்துக்கு இயக்கவுள்ளது.

அந்த இரு நாள்களிலும் சில பேருந்து, ரயில் சேவைகள் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகும் செயல்படும். வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ஆகிய பெருவிரைவு ரயில் பாதைகளில் சேவை நேரம் அவ்வாறு நீட்டிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட பாதைகளில் இரு நாள்களிலும் கடைசி ரயில் பின்னிரவு 1.17 மணிக்கும் 2.10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் புறப்படும். புக்கிட் பாஞ்சாங் இலகு ரயில் சேவை, சாங்கி விமான நிலையத்திற்கான ரயில் சேவைகள் ஆகியவை நீட்டிக்கப்படமாட்டா.

சுவா சூ காங் பேருந்து முனையத்திலிருந்து கிளம்பும் பேருந்துச் சேவைகள் 300, 301, 302, 307, 983A, உட்லண்ட்ஸ் ஒருங்கிணைக்கப்பட்ட போக்குவரத்து மையத்திலிருந்து புறப்படும் பேருந்துச் சேவைகள் 901, 911, 912A, 912B, 913, புக்கிட் பாஞ்சாங் பேருந்து முனையத்திலிருந்து கிளம்பும் பேருந்துச் சேவைகள் 920, 922, 973A ஆகியவற்றின் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேல்விவரங்களுக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் இணையத்தளத்தை நாடலாம் அல்லது 1800-336-8900 எனும் அதன் பயனர் தொடர்பு எண்ணை தினமும் காலை ஏழரை மணியிலிருந்து இரவு எட்டு மணிவரை அழைக்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!