இந்தியா-பாகிஸ்தான் போட்டி: மீண்டும் மிரட்டும் மழை

கொழும்பு: ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஒருநாள் போட்டியைக் காண கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இலங்கைத் தலைநகர் கொழும்பிலுள்ள ஆர் பிரேமதாசா விளையாட்டரங்கில் செப்டம்பர் 10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அப்போட்டி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், போட்டி நாளன்று அங்கு மழை பெற அதிக வாய்ப்புள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை, ஞாயிற்றுக்கிழமை போட்டி நடக்காமல் போனால் மறுநாள் திங்கட்கிழமை அப்போட்டியை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், காப்புநாளான (reserve day) திங்கட்கிழமையன்றும் மழை பெய்ய வாய்ப்பு அதிகம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரசிகர்கள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.

மழை காரணமாக கடந்த 7ஆம் தேதியன்று இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட முடியாமலும் போனது.

முன்னதாக, இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய பிரிவுச் சுற்று ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டு, தரப்புக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனிக்கிழமை நிலவரப்படி ஆசியக் கிண்ண சூப்பர் 4 சுற்றின் புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

சூப்பர் 4 சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிச்சுற்றில் மோதும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!