சரியான சீருடையை அணிய மறந்த கோஹ்லி

அகமதாபாத்: கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் சனிக்கிழமை பிற்பகலில் தொடங்கியது.

பூவா தலையாவில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது.

இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் திடலுக்குள் புக, அவர்களில் விராத் கோஹ்லியிடம் மட்டும் சிறுமாற்றம் தென்பட்டது.

சரியான சீருடையை அவர் அணியாததே அதற்குக் காரணம்.

சக வீரர்களது மேற்சட்டையின் தோள்பட்டையில் இந்திய தேசியக் கொடியிலுள்ளதுபோல் மூவண்ணப் பட்டைகள் இருந்தன. மாறாக, கோஹ்லியின் சட்டையில் மட்டும் மூன்று வெள்ளைப் பட்டைகள் இருந்தன.

இதுகுறித்து கோஹ்லியிடம் சுட்டிக்காட்ட, சற்றும் தாமதிக்காமல் உடை மாற்றும் அறைக்கு விரைந்து சென்று, சரியான சீருடையை அணிந்துகொண்டு அவர் களத்திற்குத் திரும்பினார்.

இதனிடையே, முதலிரு போட்டிகளில் விளையாடாத தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இஷான் கிஷனுக்குப் பதிலாக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!