இளையர் முரசு

“இருளின் முடிவில் எப்பொழுதும் ஓர் ஒளி காத்திருக்கும். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் உலகம் இயங்குகிறது. இதனை நினைவூட்டுவதும், வலியுறுத்திச் சொல்வதும்தான் என் இசையின் மூலக்கூறு,” என்கிறார் ‘சொல்லிசை’ கலைஞர் லினெத் ராஜேந்திரன்.
கையடக்கத் தொலைபேசி வேண்டாம்….கையடக்கப் புதிர்களை நாடுங்கள், என்கிறார் 27 வயது வயிரவன் இராமநாதன்.
சைக்கிளிலேயே தனி ஒருவராக சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டு தாய்லாந்தின் நராத்திவாட் மாகாணத்திற்குச் சென்று சைக்கிளிலேயே இங்கு திரும்பினார் கணேசன் சோமா, 33. அரியவகை நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ‘இக்கானமிஸ்ட்’ பத்திரிகையின் பணித்திட்ட மேலாளரான அவரது இந்தப் பயணத்தின் நோக்கம். அவர் சைக்கிளில் மொத்தம் 1,988 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார். ஜூன் 5ஆம் தேதி முதல் ஜூன் 24ஆம் தேதி வரை அவரது பயணம் நீடித்தது.
குழந்தைப் பருவத்தில் எண்ணற்ற நிதி, மருத்துவ, கல்வித் தடைகள் இருந்தபோதும் தொடர்ந்து அவற்றை முறியடித்து இன்று சந்தைப்படுத்துதல் மேலாண்மை நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார் இளையர் ஷங்கர்.
ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்பெற்ற ‘லாலீகா’ காற்பந்துப் பள்ளிக்குச் சென்று முழுநேரக் காற்பந்து வீரராகும் தன் கனவை நிறைவேற்ற இருக்கிறார் 14 வயது ஆர்யா மகேஸ்வரன்.