சிங்க‌ப்பூர்

மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி தொடர்ந்து சரிவைச் சந்தித்துவந்ததை அடுத்து சிங்கப்பூரின் ஏற்றுமதி டிசம்பர் மாதத்தில் மீண்டும் குறைந்தது.
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 17ஆம் தேதி ஐந்து கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
சரியான வெப்பநிலையில் வைக்கப்படாததாகக் கூறப்படும் தொப்புள்கொடி ரத்த மாதிரிகளைச் சோதனையிட மூன்றாம் தரப்பு ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தொப்புள்கொடி ரத்தத்தைச் சேமித்து வைக்கும் தனியார் வங்கியான கோர்ட்லைஃப் நிறுவனம் அனுப்பிவைத்துள்ளது.
ஒரே பரிவர்த்தனையில் $80 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருள்கள் வாங்குவோருக்கு $8 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அண்மையில் அறிவித்திருந்தது.
சிங்கப்பூரர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் குறைப்பதற்கு உதவும் புதிய முயற்சியான ‘மாபெரும் மலிவுக் கட்டண உணவு வேட்டை’ அதிகாரத்துவமாக செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.