$2.3 மி. பெறுமானமுள்ள நகைகள்: ஜோ லோவின் தாயாரிடம் விசாரணை நடத்த அனுமதி

கோலாலம்பூர்: 1எம்டிபி மோசடி தொடர்பாக மலேசிய வர்த்தகர் தேடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில், ஜோ லோவிடமிருந்து அவரது தாயார் 1.7 மில்லியன் அமெரிக்க டாலர் ($2.3 மில்லியன்) பெறுமானமுள்ள நகைகளைப் பெற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது.

இதுதொடர்பாக, ஜோ லோவின் தாயாரான கோ கெய்க் வீயிடம் விசாரணை நடத்த 1எம்டிபி நிறுவனத்தின் இரண்டு துணை நிறுவனங்களுக்கு மலேசிய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த இரண்டு துணை நிறுவனங்களுக்கும் சொந்தமான பணத்தைப் பயன்படுத்தி அந்த நகைகளை வாங்கியதாக ஜோ லோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவின் இருப்பிடம் தெரியவில்லை.

துணை நிறுவனங்கள் கோவிடம் எழுப்பும் கேள்விகளுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளிக்க அவருக்கு 14 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!