கொச்சி: நடிகர் ரஜினிகாந்தைப் போல தோற்றமளிக்க ரசிகர்கள் பலரும் முயற்சி செய்திருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், ரசிகர் ஒருவர் அசல் ரஜினியைப் போல தோற்றத்துடன் காணப்படுவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தேதி குறிப்பிடப்படாத அக்காணொளியில், ஆடவர் ஒருவர் எளிமையான முறையில் சட்டை, அரை காற்சட்டை, செருப்பு அணிந்துகொண்டு இளையர்களிடம் பேசுவதைக் காண முடிகிறது.
அந்தக் காணொளிப் படத்தை முதன்முதலாக பார்க்கும்போது, ரஜினிதான் அவர் வீட்டுத் தோட்டத்தில் நிற்கிறாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.
‘எக்ஸ்’ சமூக ஊடகத்தில் பகிரப்பட்ட அக்காணொளி இதுவரை 79,000க்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
சுதாகர பிரபு எனும் பெயருடைய அந்த ஆடவர், இந்தியாவின் கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த தேநீர் விற்பனையாளராவார்.
மலையாள நடிகரும் இயக்குநருமான நதிர்ஷா, இம்மாதத் தொடக்கத்தில் திரு பிரபுவைக் கண்டார். திரு பிரபுவுடன் தாம் இருக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் அவர் பகிர்ந்தார்.