ராஜ்கிரண், ரேவதி, பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்த ‘பா.பாண்டி’ படத்தின் மூலம் இயக்குநர் ஆனார் தனுஷ்.
அடுத்து தனது ஐம்பதாவது படத்தை தாமே இயக்கி, நாயகனாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மூன்றாவது படத்தை இயக்கவும் திட்டமிட்டு வருகிறாராம் தனுஷ்.
அதில் அவர் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது உறவினரான வருண் நாயகனாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சேகர் கம்முலா, வெற்றிமாறன், நெல்சன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறார் தனுஷ்.
அப்படங்களுக்கான தனது பங்களிப்பை முடித்த கையோடு தனது இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படத்தின் பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தில் இரண்டு முன்னணி நடிகர்கள் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.