அட்லி எடுக்கும் படங்கள் அனைத்தும் ஏதாவது ஒரு படத்தில் இருந்து திருடப்பட்ட காட்சிகள்தான் என்று பலரும் கூறி வரும் நிலையில் அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார் அட்லி.
இதுபற்றி இயக்குநர் அட்லி கூறும்போது, “நான் எந்த ஒரு படத்தையும் காப்பி அடித்து படங்கள் இயக்கியதில்லை. ஆனாலும் நான் இயக்கும் படங்கள் ஏற்கெனவே வெளியான படங்களின் சாயல்களில் இருப்பதாக கூறுகிறார்கள்.
“என்னைப் பொருத்தவரை நான் எடுத்துக் கொள்ளும் கதைக்கு தேவையான காட்சிகளை எனது சொந்த கற்பனையிலேயே உருவாக்கி வருகிறேன். இப்படி நான் நேர்மையான முறையில் படங்களை இயக்கியபோதும் எனது ஒவ்வொரு படங்களும் திரைக்கு வந்ததும் என் மீது திட்டமிட்டு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
“விரைவில் ஷாருக்கான்- விஜய்யை இணைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளேன். அதற்கான கால நேரம் கைகூடி வரும்போது அந்த படத்தை பிரமாண்டமாக இயக்குவேன்.
“அப்படி நான் இயக்கும் அந்த படம் ஷாரூக்கான் - விஜய் என்ற இரண்டு நாயகர்களின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய ஒரு கதையில் உருவாகும்,” என்றார் இயக்குநர் அட்லி.