சூர்யா: அற்புத வாய்ப்பு பிருத்விக்கு கிட்டியுள்ளது

‘தி கோட் லைப்’ (ஆடுஜீவிதம்) படத்தைப் பார்த்து நடிகர்கள் கமல்ஹாசனும் சூர்யாவும் நடிகர் பிருத்விராஜை மனந்திறந்து பாராட்டியுள்ளனர்.

“வாழ்நாளில் கிட்டாத வாய்ப்பு இது. ‘ஆடு ஜீவிதம்’ படம் போல வாழ்வில் ஒருமுறைதான் நடிப்பதற்கு வாய்ப்பு கிட்டும்,” என நடிகர் சூர்யாவும் “இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, கண்டிப்பாக விருதைப் பெறும்,” என்று நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளனர்.

நாயகனாக நடிகர் பிருத்விராஜும் நாயகியாக அமலாபாலும் ‘தி கோட் லைப்’ (ஆடுஜீவிதம்) படத்தில் நடித்துள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இப்படத்தை இயக்கி உள்ளார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. நாயகனாக நடிப்பதற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடையைக் குறைத்தார்.

படப்பிடிப்புக்காக சவூதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகளும் 20 ஒட்டகங்களும் வாங்கப்பட்டன.

இப்படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.

தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வியாழக்கிழமை (மார்ச் 28) வெளியீடானது.

“தி கோட் லைப்’ படம் பார்த்து மனம்குளிர்ந்து போனேன். படம் வெகுசிறப்பாக அமைந்துள்ளது. இதில் நடித்த நடிகர்கள் கடும் சிரத்தை பாராமல் நடித்துள்ளனர். அனைத்து நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குரியது.

“இப்படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கண்டிப்பாக விருதைப் பெறும்,” என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் சூர்யா தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஒட்டுமொத்த படக்குழுவினரின் இடைவிடாத கடின உழைப்பையும் பாராட்டியுள்ளார்.

அவர் தன்னுடைய பதிவில், “உயிர் பிழைக்கும் போராட்டம் கடுமையானது. இந்தக் கதையைச் சொல்ல கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உழைப்பை படக்குழுவினர் கொடுத்துள்ளனர்.

“இதை எல்லாவற்றையும் சேர்த்து ஒரு படமாகச் சொல்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒருமுறை தான் அமையும்.

“இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,” எனக் கூறியுள்ளார்.

பிருத்விராஜ் படத்திற்காகத் தனது உடல் எடையைக் கூட்டி, குறைத்துள்ளார். இந்த உழைப்பைத் தான் நடிகர் சூர்யா மனம்திறந்து பாராட்டியுள்ளார்.

பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது.

தனது குடும்ப சூழ்நிலைக்காகப் பாலைவனத்தில் வேலை செய்வதற்காக சென்ற கேரளாவைச் சேர்ந்த நஜீப் என்பவரின் உண்மைக் கதைதான் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’.

இந்தக் கதையைப் படமாக உருவாக்க, இயக்குநர் பிளெஸ்ஸி 14 ஆண்டுகள் காத்திருந்து சாத்தியப்படுத்தியுள்ளார்.

“நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது,” என்ற இனிய தகவலுடன் படத்தைப் பார்த்துவிட்டு திரையரங்கை விட்டு பார்வையாளர்கள் வெளியேறுவதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே, பிருத்விராஜின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டு நிலவரப்படி இவருக்கு ரூ.54 கோடி சொத்துகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வரும் பிருத்விராஜ், ஒரு படத்துக்கு ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

கேரள மாநிலம், கொச்சியில் சொந்தமாக ஆடம்பர பங்களா ஒன்றை கட்டி வசித்து வரும் பிருத்விராஜ், அண்மையில் மும்பையில் ரூ.17 கோடி மதிப்புள்ள சொகுசு வீடு ஒன்றை விலைக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.

நடிகர் பிருத்விராஜுக்கு கார்கள் மீதும் அலாதி பிரியம் உண்டாம். அதனால் லம்போகினி, ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர் டிபெண்டர், போர்ஷ, மெர்சிடிஸ் உள்ளிட்ட சொகுசு கார்களையும் வைத்திருக்கிறாராம். இதன் மதிப்பு பல கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!