லாவோசில் சிக்கித் தவிக்கும் 35 இந்தியர்கள்

புவனேஸ்வர்: தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் வேலை செய்யும் 35 இந்தியர்கள், தங்களது நிறுவனத்தால் பிடித்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

தாங்கள் வேலைசெய்யும் நிறுவனம், ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டதாகவும் ஆயினும் தங்களுக்குச் சம்பளமும் தராமல், ஊர் திரும்ப விடாமலும் தங்களைப் பிடித்து வைத்துள்ளதாகவும் ஒரு காணொளிப்பதிவு வழியாக அவர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

உணவுக்குக்கூட வழியின்றித் தவிப்பதாகக் கூறிய அவர்கள், தங்களது கடப்பிதழ்களையும் நிறுவனம் பறித்து வைத்துக்கொண்டதாகக் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாநிலத் தொழிலாளர்துறை ஆணையர் லாவோசிலுள்ள இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!