இந்தியா-பாகிஸ்தான் போட்டி: தாக்குதல் மிரட்டல் விடுத்த ஆடவர் கைது

அகமதாபாத்: வரும் சனிக்கிழமை 14ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்கவிருக்கிறது.

இந்நிலையில், அவ்வரங்கில் தாக்குதல் நடத்தவிருப்பதாக மின்னஞ்சல் வழியாக மிரட்டல் விடுத்த ஆடவரை குஜராத் காவல்துறை கைதுசெய்துள்ளது.

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் அந்த ஆடவர் பிடிபட்டார். அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் எந்தக் குற்றப் பின்னணியும் கொண்டிராதவர் என்றும் காவல்துறை விளக்கியது.

இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளன்று, குஜராத் காவல்துறையினர், தேசியப் பாதுகாப்புப் படையினர் உட்பட 11,000க்கும் மேற்பட்டோர் அகமதாபாத்திலும் மோடி விளையாட்டரங்கிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!