விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் பெண்கள்

திருவனந்தபுரம்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பெண்களும் பங்கேற்க வேண்டும் என்பதே இஸ்ரோவின் விருப்பம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

அப்போதுதான் எதிர்காலத்தில் அவர்களை விண்ணுக்கு அனுப்ப முடியும். அடுத்த ஆண்டு அனுப்பப்படவுள்ள ஆளில்லா ககன்யான் விண்கலத்தில் பெண் உருவத்தில் உள்ள இயந்திர மனிதனை போன்ற ஒன்று அனுப்பி வைக்கப்படும் என்றும் திரு சோம்நாத் தெரிவித்தார்.

மனிதர்களைப் பூமியிலிருந்து 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப்பாதைக்கு விண்ணுக்கு அனுப்பி மூன்று நாள்கள் தங்க வைத்து ஆய்வு மேற்கொண்டு. பின்பு அவர்களைப் பூமிக்குப் பத்திரமாக அழைத்துவருவது ககன்யான் திட்டத்தின் நோக்கம்.

இந்தத் திட்டத்தின் முதல்கட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ககன்யான் திட்டம் 2025ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும். இந்தப் பணி மிக குறுகிய காலத்தில் நிறைவேற்றப்படவுள்ளது என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!