ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் மற்றும் செகந்தராபாத் நகரங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
அந்த நகரங் களின் குடிநீர்த் தேவைக்காக அவசரமாக தண்ணீர் திறந்து விடுவோம் என கர்நாடகா நீர்ப்பாசனச் செயலாளர் உறுதியளித்து உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “பெங்களூரில் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாத சூழ்நிலை உள்ளது. ஆனால் கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்துவிடும் அளவிற்கு அணைகளில் இருப்பு உள்ளது. அவசரத் தேவைக்காக தெலுங்கானா மாநிலத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவோம்,” என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது.